Wednesday 21 January 2015

சந்தோசம் , சந்தோசம் , வாழ்கையின் பாதி பலம் , சந்தோசம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்

சந்தோசம் , சந்தோசம் , வாழ்கையின் பாதி பலம் ,
சந்தோசம் இல்லை என்றால் , மனிதர்க்கு எது பலம்

புயல் மையம் கொண்டால் , மலை மண்ணில் உண்டு ,
எந்த தீமை குள்ளும் ? சிறு நன்மை உண்டு ,





வெற்றியை போலவே , ஒரு தோல்வியும் நல்லதடி ,
வேப்பம் பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி ,
குற்றஞ் சொல்லாமல் , ஒரு சுற்றம் இல்லையடி ,
இலையும் புன்னகையால் , நீ இருட்டுக்கு வெள்ளையடி ,
தவறுகள் பண்ணி பண்ணி திருந்திய பிறகுதான் ,
நாகரிகம் பிறந்ததடி ,
தவறுகள் குற்றம் அல்ல , சரிவுகள் வீழ்ச்சி அல்ல ,
பாடம் படி பவள கொடி ,
உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பை தொட்டி இல்லை ,
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் , நாளை துன்பம் இல்லை ,

ஆதியில் ஆண்டவன் , இந்த பூமியை படைத்தானே ,
அவன் ஆசையை போலவே , இந்த பூமி அமையில்லையே ,
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய் விடில் ,
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா ?
நன்மை என்றும் தீமை என்றும் நாலு பேர்கள் சொல்லுவது ,
நம்முடைய பிழை இல்லையே ,
துன்பம் என்ற சிர்பிக் குள் தான் இன்பம் என்ற முத்து வரும் ,
துணிந்த பின் பயம் இல்லையே ,
கண்ணீர் துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள் ,
காலுக்கு செருப்பு எப்படி வந்தது ? முள்ளுக்கு நன்றி சொல்

No comments:

Post a Comment